Monday, January 18, 2010

என்னுள்ளே சமைந்திரு......!

என் இதயத்திரைக்குள்
ஒளிப்படமாய் வந்து நின்றாய்!
என்னுள் நுழைந்து
என்னில் அதிர்ந்து
என்னை ஆர்ப்பரித்து
வற்றாத ஊற்றாய்
என்னுள் வியாபித்தாய்.....!
சற்றே நான் அசந்த போதும்
கொஞ்சமாய் அசைந்தபோதும்
நிறையவே அதிர்ந்த போதும்
நெருப்புக்குள் குளித்த போதும்
என்னுள் ஒரு நயாகராவை உற்பத்தி செய்தாய்...
நான் உன்னை விரும்பிய போது
சற்றே நீ தனித்து நின்றாய்
உன்னை நான் நெருங்கும் போது
அன்னியப்பட்டு நின்றாய்....
உன்னில் என்மேல் கருணைக்கணங்கள்
எப்போது வந்தன என்பதை நானறியேன்..
பின்னர்
நீ அரவணைத்து நிற்கும் போது
துன்பத்தை மறந்து நின்றேன்....!
நான் உனக்கு நன்றி சொல்வதும்
என்னை உனக்கு உணர்த்த முயல்வதும்
இனியும் தேவையா.....?
இல்லைதானே இன்பமே

No comments:

Post a Comment