Monday, January 18, 2010

தீவிரவாதம்...!

தாயவள் உதிரத்தில் உதித்திடுவார் - மனம்
தீயென மாறியே உலகழிப்பார்...!
செந்தழல் கொண்டிங்கு சுட்டெரிப்பார் - தினம்
சந்தன விருட்சங்கள் பொசுக்கிடுவார்...!

சொந்தங்கள் அழுதிட பணிபுரிவார் - இவர்
பந்தங்கள் ஏதுமே விலக்கிடுவார்...!
கொண்டிட்ட கொள்கையில் குறுகிடுவார் - மனம்
கொஞ்சமும் இளகிடா குணம் கொள்ளுவார்...!

நாடென்ன செய்தது நமக்கெனுவார் - சினம்
நாட்டையே அழித்திட வழிசெய்குவார்...!
கூடுகள் சிதைத்திட்டு உயிர் பறிப்பார் - மதம்
கூறிட்டு நாட்டினில் குழிபறிப்பார்....!

மனிதங்கள் புதைபட உயிரழிப்பார் - குணம்
மரத்திட புனிதங்கள் அழித்திடுவார்...!
தாயவள் கருவினை களைந்திடுவார் - பணப்
பேயது ஆட்டிட மதங்கொள்ளுவார்....!

மானிடப் பதரென மதித்திடுவோம் - இவர்
மாண்டிட சட்டங்கள் விதைத்திடுவோம்..!
பாரதத் தாயவள் மடிநிறைத்தே - அவள்
பாங்குற வாழ்ந்திட வழி செய்குவோம்....!

No comments:

Post a Comment