Monday, January 18, 2010

சங்கமம்....!

எளிதாய் கிடைத்திடும் ஆனந்தம்
மிதமாய் பருகிடும் அமுதம்
மலரில் பரவிடும் நறுமணம்
பக்தியில் கிடைத்திடும் உன்னதம் -
அது கடவுளுடன் இணைந்திடும் சங்கமம்...!

வழக்கில்லா இனிய வாழ்க்கையும்
வம்பில்லா செல்லச் சண்டைகளும்
தொடராத சந்தேக கேள்விகளும்
தம்பதிகளின் நல்லுறவே இணைத்திடும் -
அது இல்லற சாகர சங்கமம்...!

தமிழில் கொஞ்சும் மொழியுடனும்
அன்னையின் அணைப்பில் அன்புடனும்
மாசில்லா குழந்தையின் மழலையுடனும்
அழகாய் மிளிரும் பந்தனம் -
அது தாய்மை உறவின் சங்கமம்...!

மன்றம் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
முத்தமிழ் மன்றத்தின் நல்வளம் -
அது முததமிழ் சாகர சங்கமம்..!

No comments:

Post a Comment