Monday, January 18, 2010

உன் மெல்லிதழ்களுக்கு நான் அடிமை...!

என் சோகப் புண்களுக்கு மருந்திட்டு
அவற்றின் ரணத்தைக் குறைப்பதாலா...?

பழையமுதுக்குத் தவித்தவன் வாயில்
பஞ்சாமிர்தம் நிறைப்பதாலா...?

ஒருமுறை உரசி உடலெங்கும் தீவைக்கும்
புதுவிதத் தீப்பொறியாய் ஆனதாலா..?

வாரியள்ளிப் பருகினாலும் வற்றாத ஜீவ ஊற்றாய்
வஞ்சனையின்றி அமுதம் ஊட்டுவதாலா...?

எவற்றால் என்று பகுத்தறிய வியலாத
விடையறியாப்புதிராய் இருந்தாலும்

உன் மெல்லிதழ்களுக்கு நான் அடிமை என்றுமே...!

No comments:

Post a Comment