Monday, January 18, 2010

தேன் துளிகள்.. பகுதி - 6

தொடர்வாய்....!

தொடர்வாய் நின்ற தொடர்வாய்த் தாக்குதல்
தொடர்வாய் நீயும் தொடர் வாய் அறியாமல்
தொடர் வாயறிந்தால் தொடர் வாய்த் தாக்குதல்
தொடர் வாய் மறப்பாய் நன்மை தொடர்வாயே...

பொருள்:

தொடருவாய் நீயும் உன் தொடர்ந்த வாய்த்தாக்குதலை உன் ஆணவத்தால் அனைவர்மீதும். நீ வாழ்வைத் தொடரும் வழி அறியாமல் தான் ( வாய் = வழி) இவ்வாறு வாய்த்தாக்குதல் தொடர்கிறாய். எப்போது நீ வாழும் வழிஅறிகிறாயோ அப்போது நீ வாய்த்தாக்குதல் தொடரும் வழி மறப்பாய். அனைவருக்கும் நன்மை செய்வதைத் தொடர்வாயே...!


செருக்கு...!


இருக்குதே பணமென்றார்ப் பரித்து நிற்காதீர்
கருக்கிளநீர் கெட்டிடாத தன்மைதான் கொண்டதேபோல்
மனமதனை தெளிவுபெற வழிவகை யறிந்துநீவிர்
சினமதனைக் களைந்தேதான் வாழ்வாங்கு வாழ்வீரென்றும்.

போவேனோ உனை விட்டு...!

போவேனோ உனைவிட்டு வெகுதூரம் தானிங்கே
சாவேனோ என்கனவை நடுவழிதான் மறந்து
நோயாலோ தீயாலோ வல்வினையின் நாவாலோ
போயாகிநான் மறைவேன் உனைமட்டும் மறவேனே...!

முதுமைக் காதல்...!

இனியகாதல் இளமையின் சுகமாய்
தனிமை துரத்திச் சிறப்பது காதல்
கனியது சுவைத்து வளம் தரும் போல
முனிவரும் விரும்பும் முதுமைக்காதல்..!

No comments:

Post a Comment