Monday, January 18, 2010

சாதலில் இல்லை உண்மைக் காதல்!



சாதலில் இல்லை உண்மைக் காதல்! 



கல்லின் மீது தடுக்கிவிழுந்தால்
பஞ்சாய் முன்னால் விரிவது காதல்...

எங்கோ சென்ற காதலன் வரும்வரை
கண்களை வாசலில் பதிப்பது காதல்...

காதலி நனைந்தால் குடையாய் முன்னால்
குளிரில் விறைத்தும் காப்பது காதல்...

வெயிலில் களைத்த காதலன் வருகையில்
குளிர்ந்த மோராய் நிற்பது காதல்...

தாகம் என்று சொல்லும் முன்னே 
நீராய் மாறிப் பொழிவது காதல்...

உடலைப் பார்த்து வருவது காமம்
உள்ளம் பார்த்து உருகுதல் காதல்... 

என்னில் உன்னை உன்னுள் என்னை 
மாற்றி வைத்து மகிழ்வது காதல்...

அவனை அடித்தால் அவளைத் தாக்கும்
வலியில் மாறித் துடிக்கும் காதல்...

இறைமேல் பக்தி ஒருவகை காதல்..

பசியின் போது உணவது காதல்...

வாடிடும் ஏழைக் குதவுதல் காதல்..

தாய்மேல் குழந்தை கொண்டது காதல்...

நீர் மேல் மீன்கள் வைப்பது காதல்...

காதல் காதல் என்றும் காதல்..

சாதலில் இல்லை உண்மைக் காதல்!

No comments:

Post a Comment