Monday, January 18, 2010

உனக்கென்ன தலையெழுத்து...?

நீ
செம்மண்ணில் விளைந்த செந்தாமரை...
இந்த
கரும்மண்ணில் வந்து முளைக்க
உனக்கென்ன தலையெழுத்து...?
நீ
ஊரெல்லாம் உற்சாகமாய் இழுக்க
ஆசைப்படும்
திருவாரூர்த்தேர்
இந்த ஒட்டுக்குடிசையில் அடைபட
உனக்கென்ன தலையெழுத்து....?
நீ
ஊர்ச்சனம் முகந்து குடிக்க
உபயோகப்ப்படும்
சிறுவாணி வெள்ளம்
இந்த சன்னியாசியின் கமண்டலத்தில் அடைபட
உனக்கென்ன தலையெழுத்து....?
நீ
உலகமெல்லாம் போற்றும் குளிர்நிலா
இந்த ராப்பிச்சைக்க்காரனின் அடிமையாகிட
உனக்கென்ன தலையெழுத்து...?
நீ
எல்லாருக்கும் நன்மை செய்யும்
மதர் தெரெசா
இந்த நோயாளிக்கு சேவை செய்ய
உனக்கென்ன தலையெழுத்து....?

No comments:

Post a Comment