Monday, January 18, 2010

என்னைத் தொடராதிரு.....!

என்னைத்தொடர்ந்து
ஏன்வருகிறாய்?
நான் என்ன உனக்கு
ஒட்டா உறவா?
செல்லுமிடமெல்லாம் என்னை
செல்லமாய்த் தொடர்கிறாய்...
நான் குனியும் போது முதுகிலும்
நிமிரும்போது மார்பிலும் தவழுகிறாய்...
என் அருகில் சம்மணமிட்டு உண்கிறாய்..
என் நெஞ்சில் தூளி கட்டி உறங்குகிறாய்...
எனக்கும் முன்னால் போகிறாய்...
எனக்கு முன் எழுகிறாய்...
நான் உறங்கிப் பின் உறங்குகிறாய்...
என்மேல என்ன அததனைப்பாசமா?
என் உயிரைக்குடிக்கும் உன் நேசம் அதிகமா?
ஆனால்
நான் உன்னை விலக்குகிறேன்...
விரும்பவில்லை உன்னை...
போ
போய்விடு
தொடராதிரு என்றுமே.....
என்னைத் தொடர்ந்திடும் துன்பமே......!

No comments:

Post a Comment