Friday, June 1, 2007

தீர்ப்பு





தீர்ப்பு
(கோத்ரா கலவரத்தில் பலர் மாண்ட போது நான் எழுதிய கிறுக்கல் வரிகள்)

அடிக்கடி டி.வி. பார்க்கும்
என் எல்.கே.ஜி. மகன் கேட்டான்,
'கோத்ராவில என்னப்பா?'
தடுமாறிப்போன நான்
ஒரு மாணவன் தன் சக மாணவனை
அடிப்பதாகச் சொன்னேன்.
' டீச்சர் கிட்ட சொல்லலாமே'
பிஞ்சு உள்ளம் பரிவாகச் சொன்னது.
டீச்சரும் சேர்ந்தடிக்கும்
அவல நிலையை அழகாகச் சொன்னேன்.

தளரவில்லை அவன்!
தீர்ப்பளித்தான் இப்படி...
'டீச்சரை சஸ்பென்ட் செய்யல்லியா?'

கரெஸ்பாண்டெட்டும் கயவனாய் இருப்பதை
நாசூக்காய் சொல்ல நாவில்லாமல்
நட்ட மரமாய் நான் !!!

1 comment: