Monday, June 11, 2007

முதியோர் இல்லம்

ஏழ்கடலுக்கு அப்பாலிலிருந்து இந்த
ஏழையைக் காணவந்தாயே!
ஆசிரம அடிமையாய் காயம் பட்ட எனக்கு
ஆதரவு சிறகால் மருந்திட வந்தாயோ?

என்னைப்பெறாத தாயே மகராசி
உன்னைப்பெற்றவளின் தேகம் மட்டுமல்ல
உள்ளிருக்கும் ஆன்மாவும் குளிரட்டும்.
உன் மகளை நீ தன்னம்பிக்கையுடன்
தன் காலில் நிற்க வை.
என் தலைமுறையுடன் போகட்டும்
தாயைக்க்காக்காத தனயன்கள் திருந்தட்டும்.

பெற்றோரின் வயிறெரிந்தால்
புல் பூண்டும் கருகிவிடும்!
இதைப்புரியாத மகவுகள்
சதையிருந்தும் பொம்மைகளே!

No comments:

Post a Comment