Friday, June 1, 2007

முற்றுப் பெறாத முன்னுரைகள்


முற்றுப் பெறாத முன்னுரைகள் 

அவன்
தன் வசந்த காலக் கனவுகளை
அரங்கேற்றக் காத்திருந்தான்...
இடையில் தான்
அந்த
கருச்சிதைவு...
வடித்த உதிரத்திற்கு அளவில்லை...
உவமை இழந்த கவிதை போல
வெளுத்துப் போனான்...

காவியச் சிற்பம் செதுக்குவதாய் எண்ணி
காலம் காலமாய்
கல்லுடைத்தான்....
வாழ்நாள் முழுக்க
வாக்களித்தே உருக்குலைந்த
இந்திய மக்கள் போல!

இமய மலையை இடிப்பதாய் எண்ணி
கறையான் புற்றைக்
காலி செய்தான்...
இன்றைய பத்திரிகைகள் போல!

மிகுந்த பிரயாசையுடன்
சிரமப் பட்டு
அல்லல் பட்டு
உரிமைக்குக் குரல் கொடுத்தான்...
பாம்பு வாய்த் தவளைப் போல!

அவன் இமைகளைக்
கண்களே கிழித்தன...
இன்றைய அரசியல்வாதியைப் போல!

No comments:

Post a Comment