Monday, June 11, 2007

நீ எங்கே................?


எங்கோ திரிந்தலைந்த

என் ஆன்மாவுக்கு

உடல் பிச்சை தந்தவளே!

நான் நன்றிக்கடன் தீர்க்குமுன்

நீ சென்ற இடம் எது?

தாய்மை என்பது

நூறு பெற்றாலும்

நொந்துகொள்ளா உறவன்றோ?

ஒன்றே பெற்று விட்டு

ஒதுங்கியது ஏனோ நீ?

உன் தாலாட்டு கேட்காமல்

உறங்கலையே வெகு நாளாய்....

கற்பனைத் தாலாட்டு

எத்தனை நாள் கைகொடுக்கும்?

காதலித்த காரிகையில்

கண்டேனே உன் உருவை

கதற விட்டுப் போனாளே

அவளும் தான் உன் போல!

பார்க்கும் பெண்களில்

உன் படிவம் காண்கிறேன்.

கண்ணாடி முன் நின்று

என் வடிவம் மேய்கிறேன்

உனைத்தேடி உருக்குலைந்து

நிலவைப்போல் தேய்கிறேன்

கடவுள் போல் உருவற்றுப்

போனாயே என் தாயே!

No comments:

Post a Comment