Saturday, June 30, 2007

கவிச் சிதறல்கள்:

1.

இப்புவியினில் பலமனிதரும்
நானெனுமொரு தலைக்கனமொடு
அலைகிறஒரு இழிநிலைக்குணம்
அழிகிறவரை ஒருவிடிவிலை

2.
உன்மனமொரு பணிவினைப்பெற
இறைவனைதினம் அடிதொழுதிடு!
இப்பிறவியில் நல்மனமுடன்
எளியவர்க்கொரு பணிசெய்திட
அன்னைக்கொரு நல்மகனென
அனுதினமுனை ஊர்போற்றிட
திருக்குறளினை பணிவுடன்படி
என்றும்அறி மெய்யிதுவென!

3.
பொங்கியெழும் வீரம்தனை
புகட்டிச்சென்றபாரதியும்
சங்கினைப்போல் மேன்மைதரும்
வாழ்வுசொன்னவள்ளுவரும
இங்கிதமாய்த் தத்துவத்தை
வழங்கிச்சென்றஅவ்வையாரும்
தங்கியிங்கு வாழ்ந்த
நல்தமிழகமேநீவாழி!

4.
அதுவே யல்லது இதுவே யென்றொரு
மயக்கம் கொண்டது மனம்
எதுவே யாயினும் பொதுவே என்றோரு
கருத்தும் சொன்னது உளம்
மதுவே யருந்தி மனமே
மயங்கி உலகைத் துய்த்தது உடல்
அதுவே யல்லவிது வேசுகமென
உய்வைக் கொடுத்தது தவம்!

5.
நாட்டில் நயம்பட உரைப்போர் பலரெனினும்
வீட்டில் விரும்பி யேற்போர் சிலர்- கூட்டில்
சீமானா யுலாவிய பொன்குஞ்சு வெளியிற்போய்
தாமாய் பொலிவிழக்கும் போ!

6.
உனக்கென்ற மனங்கொண்டு தொடங்கிடும் காரியம்
சினக்குனம் கொண்டவர் பேசிடும் வாசகம்
இனக்கண்ணை அகக்கண்ணாய் பெற்ற பேரறிஞர்
கனக்கும் மனத்துடன் கூறுவேன் பாழ்!

7.
துணிந்திட்ட மனிதனுக்கு இவ்வுலகே ஒருபந்தாம்
பணிந்தேவல் செய்தெலும்பு கேள்விக்குறி யானவனோ
துணிபோர்த்த ஓருடம்பே யல்லாது வேறென்ன
மணிபோல் நீஒலித்து இப்பூமலரச் செய்!

8
அடியினைக்காண ஒருவன் பூமிக் கடியினில்புகுந்தான்
முடியினைக்காண ஒருவன் கார் முகிலுக்குள்நுழைந்தான்.
படியளந்தோனை நெஞ்சத் தடியினில் தேடிடமறந்தான்!
முடிவிலாஅவனை ஏழை முகத்தினில் காண்போம்!

No comments:

Post a Comment