Friday, June 1, 2007

தயவு செய்து எழுப்பாதீர் அவரை...

தயவு செய்து
எழுப்பாதீர் அவரை.....


பணத்தை கொட்டி
பஞ்சணையில் வாங்கியதல்ல
பரம நித்திரை....

விலை தந்து பெறுவதல்ல
விரும்பும் போது வருவதே
விழைவான உறக்கம்...

உழைத்து களைத்து
உதிரமாய் வியர்வை சிந்தி
உருக்குலையும் போது வரும்!

மனதில் சுழலும்
மனைவியின் கவலை
மகனின் மழலை இவைதாம்
மஞ்சமும் தலையணையும்...

கடன் வாங்கி உழுது
கனவுடன் பயிரிட்ட
கழனி நினைவுகள்
கனவாய் மோதும்...

மகிழ்வான தூக்கம்
மாத்திரையால் அல்ல-
மன நிம்மதியால் தானே!!

No comments:

Post a Comment