Friday, June 1, 2007

எங்கேயடி நீ?

எங்கேயடி நீ?



ஈன்றபின் பாலூட்டுவது
பசுவின் கடமை!
என் நெஞ்சைத் தூண்டி
நினைவுகளைக் கோதுவது
உன் கடமைதானேயடி?
என் சந்தோஷக் கணங்களை
ஏந்திக்கொண்ட நீ
காலனுடன் போராடும்
இக்கணம் எங்கேயடி?

உறவுகள் ஆறுதலை
உதட்டால் நவில்கின்றன..
ஊனமுற்ற இக்கணம்
ஊன்று கோல் நீ தானேயடி?
சல்லாப நினைவுகள்
ஒடுங்கிவிட்டன...
இந்த சாபக்கணங்களில்
அணைக்கக் கூட வேண்டாம் நீ
கடைக் கண்ணால்
கருணைமட்டும் காட்டு...

தாயைக் காணாத எனக்கு
நீயெ தெரிந்தாய்...
என் கண்கள் மங்கிப் போயினும்
அகக்கண் முழுவதும் நீயே தானடி...
அழும் குழந்தைக்கு தானே
அரவணைப்புத் தேவை..
வந்து விடு நீ
என் கடைசி மூச்சுக்காற்றை
எள்ளளவாவது சேமித்துப் போ!

No comments:

Post a Comment