Friday, June 1, 2007

திருக்குறள்-----புதுக்குரல்! கடவுள் வாழ்த்து

திருக்குறள்-----புதுக்குரல்!
கடவுள் வாழ்த்து

1.அகரத்தில் தொடங்குமாம் அருந்தமிழ் - அதுபோல்
இகத்தினில் முதலாம் இறை!

2.பலகற்றும் ஏது பயன் பகைவனுக்கும் அருளும்
உலகன்அடி தொழா தவன்!

3.அகமதில் உள்ளான் இறைவன் - வணங்கிடின்
இகமதில் ஆயுள் நீளும்!

4. பாதகம் சாதகம் அறிந்திடா - முடிவிலான்
பாதம் பணி துன்பம் தொலை!

5. முன்வினை பின்வினை என்செயும் - இறைவனின்
முன் உனை அர்ப்பணித் தால்!

6. ஐம்புலன் அடக்கியோன் பொய்யிலா ஒழுக்கமே
மெய்வாழ்வு என்றே அறி!

7. தனக்குநிகர் இல்லா தாந்தோன்றியனை உணர்ந்தோர்
மனக்கவலை மாய்ந்து விடும்.

8. அறவழி காப்போன அடி பணிந்தோர் அல்லாது
பிறவ்ழி காண்பது அரிது.

9. முதல்வனை வணங்கா தலையின் முகமெங்கும்
உதவிடா செவி கண்களே!

10.அப்பன்தன் பாதம் பணிந்திடா அறிவிலான்
இப்பிறவி கடத்தல் அரிது!

No comments:

Post a Comment