Wednesday, June 6, 2007

தமிழகமே என் தாய்வீடே...

தமிழகமே என் தாய்வீடே...

உன்னைவிட்டு வெகு தூரம் நான்

மனத்தால் அல்ல...

உடலால் மட்டுமே!

உன்னைக்குத்தி ரணமாக்கும்

உன்மத்தர்களைப் பதம் பார்க்க

உள்ளம் குறுகுறுக்கிறது...

கை கால் விலங்கிட்ட

மனோகரனின் நிலைதான்...

என் தாயின் பெரும்புதல்வன்

எம் தலைவன் பாரதி

எள்ளப் படுகிறான் சில

எருமைக்கூட்டங்களால்...

உயிருடன் இருக்கும் போதே அவனை

உணராத சில கூட்டம்

உறைந்துவிட்ட பின் தானா

உயிர்ப்பிக்கப் போகிறது......?

முதலைக்கண்ணீர் வடிக்கும் சில கூட்டம்

சிவனை உச்சரித்து சீவனை வதைக்கிறது...

இனப்பெயரைச் சொல்லிச் சொல்லி

இனிதாய்ச் சுரண்டும் ஒரு கூட்டம்!

சட்டசபைக்குள் இறங்கி

மீன் பிடிக்கும் ஒரு கூட்டம்!

எத்தனைப் பேய்களடா

இந்தத் தமிழ் வேம்பு மரத்தின் மேல்!

பேயோட்ட வேண்டிய இளம்குருத்துகள்

திரிஷாவின் தொப்புளில்

திரிசங்கு காணும் அவலம்!

வந்தவனை எல்லாம் வாழவைத்து

இருந்தவனை ஏமாளியாக்கும்

இருதலைக் கொள்ளி எறும்பாய்

என் இனிய தமிழகம்!

No comments:

Post a Comment