Friday, June 1, 2007

திருக்குறள்-----புதுக்குரல்! வான் சிறப்பு

திருக்குறள்-----புதுக்குரல்!

வான் சிறப்பு

1 மழையின்றி உயிர்வாழா தென்பதால் அம்மழையை
பிழையின்றி அமிழ்தமென் போம்

2 உண்பார்க்கும் உணவாகிப் பருகியோர்ககும் அதுவேயாகி
கண்போன்ற தாம்அம் மழை!

3 வான்பொய்ப்பின் வறுமைவந்து சேரும் பட்டினியால்
தானழிந்து போகும் உயிர்.

4 ஏர்கொண்டு உழுவாரோ உழவர் அரசியல்போல்
கார்மேகம் பொய்த்து விடில்.

5 கொடுப்பதும் கெடுப்பதும் நொந்தார்க்கு வழங்கிப்பின்
எடுப்பதும் எல்லாம் மழை.

6. காரின்றி காரிருள் சூழ்ந்திடுமே இப்புவியில்
வேரின்றிக் கருகிடுமே புல்.

7 பெருங்கடலும் வற்றிப்போம் பெருங்குடலும்சுற்றிப்போம்
சிறுமழையும் பெய்யாவிடில்.

8. தேரோட்டம் நின்றுபோம் திருவிழா பூசையில்லை
காரோட்டம் இல்லாவிடில்

9 பிறர்க்கென வழங்கிடும் தானமும் நல்தவமும்
பிறழ்ந்திடும் மழையின்மை யால்.

10 மழையின்றி நிலையாது இவ்வுலகம் ஒழுக்கமும்
பிழையாகி உறைந்து விடும்.

No comments:

Post a Comment